Saturday, 5 March 2011

நகரத்தின் பிரதான சாலைகளில்
புகைவண்டியென பயணிக்கும் ஊர்திகளில் 
திமிறிக்கொண்டிருந்த காளைகளிடமிருந்து
வெடித்துக் கிளம்பின  மகிழ்ச்சியின் பிரவாகங்கள்
ஒவ்வொரு தலையிலும் பதியனிட்டு
நடப்பட்டிருக்கின்றன
ஒளிரும் நிறத்திலான நம்பிக்கைகள்
இருவிரல் பூஜ்ஜியத்தால்
காற்றில் ஜனித்த சீழ்க்கையொழிகளில் மின்னிக்கொண்டிருந்தன
நாளைய இருத்தல்கள் 
உற்சாக பானத்தில் நனைத்த சொற்களை
பாத சாரிகளிடம் வீசியபடி விகார உருவத்துடன்
பயணிக்கிறார்கள்
யாவருக்குமான ஏணிவலைப்  பின்னல்களிலும் 
பொறிக்கப்படுகின்றன  
புதிய மரபுக் குறியீடுகள் 
காளைத்தோல் போர்த்திய நரியொன்று  
உதடு   பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
இளமைகளின் நீரோட்டத்தை.
                                                   
                                                            - புதுகை சஞ்சீவி

No comments:

Post a Comment