நகரத்தின் பிரதான சாலைகளில்
புகைவண்டியென பயணிக்கும் ஊர்திகளில்
திமிறிக்கொண்டிருந்த காளைகளிடமிருந்து
வெடித்துக் கிளம்பின மகிழ்ச்சியின் பிரவாகங்கள்
ஒவ்வொரு தலையிலும் பதியனிட்டு
நடப்பட்டிருக்கின்றன
ஒளிரும் நிறத்திலான நம்பிக்கைகள்
இருவிரல் பூஜ்ஜியத்தால்
காற்றில் ஜனித்த சீழ்க்கையொழிகளில் மின்னிக்கொண்டிருந்தன
நாளைய இருத்தல்கள்
பாத சாரிகளிடம் வீசியபடி விகார உருவத்துடன்
பயணிக்கிறார்கள்
யாவருக்குமான ஏணிவலைப் பின்னல்களிலும்
பொறிக்கப்படுகின்றன
புதிய மரபுக் குறியீடுகள்
காளைத்தோல் போர்த்திய நரியொன்று
உதடு பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
இளமைகளின் நீரோட்டத்தை.
- புதுகை சஞ்சீவி

No comments:
Post a Comment