Tuesday, 8 March 2011

தன்னிலும் பலவீனமான ஒருவனை
நீங்கள் குற்றம் சுமத்துகையில்
அவனுக்கான அவன் வாதங்களை 
உங்கள் குரல் எறும்பின் மீது வைத்த
பனிக்கட்டியாய் அழுத்துகிறது 
அவன் கண்களில் தெரியும் உண்மைகளை
ஒரு தேர்ந்த நடிகனின் பெயரால் 
போலியாக்குகிறீர்கள்
நம்பவைத்துவிடுகிறீர்கள் அவனை 
அவன் கழுகின் சிறகுகளை 
கோழியின் சிறகுகளென
நீங்கள் உதாசீனபடுத்திய அவன் 
கண்ணீர் துளிகளை நான் பருகுகிறேன்
கூர்மையாகிறதென் அழகு.  

                                                  - ஜா.பிராங்க்ளின் குமார்

No comments:

Post a Comment