
சாலையோரங்களை அறிந்து
பள்ளங்களில் தேங்கிக்கிடந்த
நேற்றைய மழையின் மிச்சம்
கடந்த வாகனத்தின்
சக்கரங்களில் பட்டு
இன்றைக்கானதை எதிரொலிக்க
பதறி எழுந்தவன்
நனைந்த மூட்டையுடன்
அடுத்த இடம் நோக்கி
நகர்கிறான்
உறங்கா அவன் விழிகளில்
கலையமறுக்கிறது துயில் மேகம்.
-யாழி
No comments:
Post a Comment