Wednesday, 27 April 2011



சாலையோரங்களை அறிந்து 
பள்ளங்களில் தேங்கிக்கிடந்த
நேற்றைய மழையின்  மிச்சம்
கடந்த வாகனத்தின்                                           
சக்கரங்களில் பட்டு
இன்றைக்கானதை எதிரொலிக்க
பதறி எழுந்தவன் 
நனைந்த மூட்டையுடன் 
அடுத்த இடம் நோக்கி
நகர்கிறான்
உறங்கா அவன் விழிகளில் 
கலையமறுக்கிறது துயில் மேகம்.
                                             -யாழி

No comments:

Post a Comment